tamilnadu

img

நீட் பயிற்சி மையம் நடத்தி மோசடி மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார்

கோவை, செப். 23 – கோவையில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் பயிற்சி மையத்தின் மீது  உரிய நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த னர்.  கோவை ஆர்.எஸ் புரம் பகுதி யில் சென்னையை தலைமையிட மாக கொண்டு ஏக்ஸலண்ட் அகா டமி என்ற நீட் பயிற்சி மையம் செயல் பட்டு வருகிறது. இந்த  நீட் பயிற்சி  மையத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் இவ்வாண்டு சேர்ந்து பயின்று வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு இந்த பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ, மாண விகள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்ததால், அடுத்தாண்டு நடைபெறும் தேர் விற்காக பயிற்சி பெற்று வந்தனர். இதற்காக மாணவ, மாணவிகளிடம் ரூ.55 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பயிற்சிக்காக கட்ட ணம் பெறப்பட்டுள்ளது.   இதனிடையே, நீட் பயிற்சி மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததுடன், அங்கு பணியாற்றும் ஆசிரியர்க ளுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களாக இந்த பயிற்சி மையத்தில் முறையாக மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு கள் எடுக்காமலும், அடிக்கடி விடு முறை விடுவதுமாக இருந்து வந் துள்ளது. இதனால் தங்களது படிப்பு பாதிக்கப்படுவதுடன், நாங்கள் செலுத்திய கட்டணமும் திரும்பப் வழங்கப்படாததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள் ளோம்.  ஆகவே, மேற்குறிப்பிட்ட நீட் தேர்வு பயிற்சி மையத்தின் பொது  மேலாளர் முகமது சதாம் உசேன் மற்றும் கோவை கிளை மேலாளர் ராஜேஸ் ஆகியோர் மீது நடவ டிக்கை எடுக்க கோரியும், தங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டுமெனவும் வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.