tamilnadu

img

தீண்டாமை சுவற்றை அகற்றக்கோரி செப்.1ல் போராட்டம் - வாலிபர் சங்கம்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கும் அரசு நிர்வாகம்

சேலம், ஆக. 28- தீண்டாமை சுவர் பிரச்சனையில் பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்த ரவை மதிக்காத வருவாய்த் துறையின ரைக் கண்டித்து செப்.1 ஆம் தேதியன்று திட்டமிட்டபடி போராட்டம் நடைபெ றும் என வாலிபர் சங்கம் அறிவித் துள்ளது. சேலம் மாவட்டம், சன்னியாசி குண்டு பஞ்சாயத்து, காட்டு மரக் குட்டை பகுதியில் 70க்கும் மேற்பட்ட தலித் மக்கள் குடியிருந்து வருகின்ற னர். அப்பகுதியில் உள்ள மக்கள் நான்கு தலைமுறைகளுக்கு மேல் பயன் படுத்தி வந்த பொதுப் பாதையை தடுத்து தீண்டாமை சுவர் கட்டப்பட் டது. இதுகுறித்த வழக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்று, இறுதியாக தீண் டாமை சுவர் உள்ள இடத்தை அகற்றி விட்டு பொதுப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என சேலம் மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவிற்கு பின்னரும் மாவட்ட நிர் வாகம், வருவாய்த் துறையினர் எந்த வித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை. இதனை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் செப். 1ஆம் தேதியன்று போராட் டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள் ளனர்.  இதைத்தொடர்ந்து, சேலம் வட் டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், அஸ்தம் பட்டி காவல் துறையினர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், வழக்கறிஞர் விஜய குமார், வாலிபர் சங்கத்தின் சேலம் கிழக்கு மாநகரச் செயலாளர் பெரிய சாமி, தலைவர் பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.  இதில், இப்பிரச்சனை சம்பந்தமாக ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்ட பின்புதான் பொதுப்பாதை சம்மந்த மாக முடிவெடுக்க முடியும் என அதிகா ரிகள் தெரிவித்தனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்கள், பொதுப்பாதையை தலித் மக்கள் பயன் படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித் தும், உத்தரவை ஏன் அமல்படுத்த வில்லை என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க மறுத்த அதிகாரி கள், தற்போது எதுவும் செய்ய முடி யாது என தெரிவித்ததாக கூறப்படுகி றது. எனவே, நீதிமன்ற உத்தரவை மதிக் காத வருவாய் துறையினரை கண்டித்து காட்டு மரக்குட்டை பகுதியில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற வலியு றுத்தி திட்டமிட்டபடி வாலிபர் சங்கம் சார்பில் திட்டமிட்டப்படி போராட் டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.