tamilnadu

img

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாடு உயிருக்கு போராட்டம் வனத்துறையினர் விசாரணை

மே.பாளையம், ஆக.16-   மேட்டுப்பாளை யத்தில் காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி கொல்ல வைக்கப் பட்டிருந்த அவுட்டுக் காய் என்னும் நாட்டு  வெடிகுண்டை கடித்ததால் பசுமா்டு ஒன்று உயிருக்கு போராடி வருகிறது.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் காட்டுப்பன்றி, மான் போன்ற வன உயிரினங் களை வேட்டையாட அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநாட்டு வெடியை கடித்த வாய்மற்றும் தலைப்பகுதி சிதறி விலங்கு கள் இறந்து போகும். காட்டுப்பன்றி போன்ற விலங்கு களுக்கு வைக்கப்படும் இந்த ஆபத்தான அவுட்டுக் காயை கடித்து யானைகள் கூட இறந்துள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் கோவை வனக்கோட்ட பகு திகளில் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது. இந்நிலை யில், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாரில் வனத்தை  ஒட்டியுள்ள இடத்தில் மேய்ச்சலுக்கு சென்ற முகமது ஜாபர் என்பவரது பசுமாடு அங்கிருந்த அவுட்டுக் காயை கடித்ததில் அதன் வாய் பகுதி சிதறி போனது.

இத னால் கடும் வலியோடு தீவனமோ, நீரோ அருந்த இயலாமல் பசு மாடு உயிருக்கு போராடி வருகிறது. இதுகுறித்து அவர் அளித் துள்ள புகாரின் பேரில் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வெடி பொருட்கள் பயன்பாடு காரணமாக மேட்டுப்பாளையம் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.