சேலம், ஆக.25- சேலத்தில், மாநில அள விலான யோகா போட்டி யில் பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த 700க்கும் மேற் பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாண விகள் பங்கேற்றனர். சேலம் மாவட்ட ஃப்ரீ ஸ்டைல் யோகா அசோசி யேசன் மற்றும் அசோசி யேசன் ஆப் தமிழன் ஃப்ரீ ஸ்டைல் யோகா சார்பில், சேலத்தில் ஸ்டேட் ஃப்ரீ ஸ்டைல் யோகா சாம்பி யன்ஷிப் 2019ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான யோகா போட்டியானது ஞாயிறன்று நடைபெற்றது. இதில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700க்கும் மேற் பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை திறன்பட வெளிப் படுத்தினர். தொடர்ந்து இந்தப் போட்டி களில் வெற்றிபெற்ற மாணவ, மாணவி களுக்கு வெற்றி சான்றிதழ்களும், கேடயமும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்தப் போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அடுத்து நடைபெற உள்ள தேசிய அளவி லான யோகா போட்டியில் பங்கேற்க உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர்கள் தெரிவித்தனர்.