tamilnadu

சிக்கதிம்மன அள்ளி ஏரியில் தூர்வாரும் பணி துவக்கம்

தருமபுரி, ஜூலை 7- தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் அருகே சிக்கதிம்மன அள்ளி ஏரியில் ரூ.41 லட்சத்தில் தூர்வாரும் பணியை அமைச் சர் கே.பி.அன்பழகன் தொடக் கிவைத்தார். அப்போது அவர் பேசுகை யில், மாநில அரசு சார்பில் நிக ழாண்டில் முதல் முறையாக சிக் கதிம்மன அள்ளி ஏரியில் குடி மராமத்து பணிக்காக ரூ.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தருமபுரி மாவட் டத்தில் அன்னசாகரம் ஏரி ரூ.70 லட்சத்திலும், சோகத்தூர் ஏரி ரூ.44 லட்சத்திலும், கொளகத்தூர் சோழராயன் ஏரி ரூ.47.50 லட் சத்திலும், கொளநாச்சியம்மன் ஏரி ரூ.36.70 லட்சத்திலும், நல் லம்பள்ளி வட்டத்திற்குள்பட்ட அதியமான்கோட்டை ஏரி ரூ.48 லட்சத்திலும், பாலவாடி ஏரி ரூ.55.50 லட்சத்திலும், பாலக் கோடு வட்டத்திற்குட்பட்ட பனங்கள்ளி ஏரி ரூ.54.50 லட் சத்திலும், புலிக்கல் ஏரி ரூ.50 லட்சத்திலும் செங்கன்பசுவந்த லாவ் ஏரி ரூ.49.80 லட்சத்திலும் தூர்வாரும் பணிக்காக ரூ.4.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், ஏரியை தூர்வாரி கரையைப் பலப்படுத்துதல், வழங்கு வாய்க்கால், உபரி நீர் வழியை சீரமைத்தல், மதகு சீர மைத்தல், பாசனக் கால்வாயை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணி கள் மேற்கொள்ளப்படும்.  மேலும், விவசாயப் பயன் பாட்டிற்காக வண்டல் மண்  வழங்கப்படும். குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படு வதால் ஏரிகளின் அருகே உள்ள கிணறுகள், நிலத்தடி நீர்மட்டம் உயரும். 1,234 ஹெக்டேர் நிலங் கள் பாசன வசதி பெறும். பொது மக்களின் தேவையைக் கண்ட றிந்து அதை நிறைவேற்ற அரசு  விரைவாக நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித் தார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். சார் ஆட் சியர் ம.ப.சிவன் அருள், நீர்வள ஆதார அமைப்பு செயற் பொறி யாளர் மெய்யழகன், வட்டாட் சியர் கேசவமூர்த்தி, உதவிப் பொறியாளர்கள் சாம்ராஜ், சேது ராஜன் மற்றும் சட்டமன்ற உறுப் பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.