அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கோவை, பிப். 10- அரசு போக்குவரத்து கழகத் தில் பணியாற்றும் தொழிலாளர்க ளின் ஊதிய உயர்வு பேச்சுவார்த் தையை உடனடியாக துவக்க வலியுறுத்தி கோவை தலைமை பணிமனை முன்பு திங்களன்று அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழக ஊழி யர்களின் 14 ஆவது ஊதிய பேச்சு வார்த்தை இதுவரை துவக்கப்ப டவில்லை. இதைத்தொடர்ந்து தொழிலாளர் நலனில் சிறிதும் அக் கறையில்லாத கழக நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழ கம் முழுவதும் தொடர் இயக்கங் கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவையில் திங்க ளன்று தொழிற்சங்க கூட்டமைப் பின் சார்பில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசுபோக்கு வரத்து கழக தலைமையகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல் பிஎப் தொழிற்சங்க தலைவர் பெரியசாமி தலைமை வகித் தார். சிஐடியு தமிழ்நாடு அரசுபோக் குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நாயினார், எல்பிஎப் சம்மேளன பொருப்பாளர் சுகுமார், ஏஐடியுசி எம்.ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில், சிஐ டியு சார்பில் பொதுச்செயலாளர் வேளாங்கண்ணிராஜ், ப.காளி யப்பன், எம்எல்எப் விடுதலைரவி, துரைசாமி, எச்எம்எஸ் ராஜா, ஐஎன்டியுசி மதியழகன், டிடிஎஸ் எப் சார்பில் கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.