tamilnadu

img

தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணியை தொடங்கிடுக

தருமபுரி, ஜூலை 4- தருமபுரியில் சிப்காட் அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண் டும் என தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 3- வது வட்ட மாநாடு தருமபுரி வருவாயத்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் வியா ழனன்று நடைபெற்றது. வட்ட துணை தலைவர் பி.மாயக்கண்ணன் தலைமை வகித்தார். வட்ட இணை செயலாளர் இ.கிருஷ்ணமூர்த்தி வர வேற்றார். மாவட்ட தலைவர் கே.செளந்தரம் துவக்கி வைத்துப் பேசினார். மாநில செயற்குழு உறுப் பினர் எம்.பெருமாள், மாவட்ட பொரு ளாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் ஜி.திருவேங்கடம், மாவட்ட இணை செயலாளர் பி.மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மாநாட்டில் புதிய வட்ட தலை வராக மணி, செயலாளராக முனிராஜ், பொருளாளராக பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதி யர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். அரசு மருத்துவ மனைகளில் ஓய்வூதியருக்கு தனி வார்டு அமைக்கவேண்டும். ஓய்வூதி யர்களுக்கு வருமான வரி செலுத்து வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.