tamilnadu

img

14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்குக

போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

சேலம், மார்ச் 10- 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை  உடனே துவங்க வேண்டும் என வலியு றுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர் கள் சேலம் போக்குவரத்து தலைமை  அலுவலகம் முன்பு செவ்வாயன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தொமுச மண்டல தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழகத்தில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உடனே துவங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் ஆன வித்தியாசத்தை சரி செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். 240 நாட்கள் பணி முடித்த அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம்  செய்து செலவு செய்த ரூ. 8 ஆயிரம்  கோடியை உடனே திரும்ப வழங்க  வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர் களுக்கு, ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து  பண பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் முருகராஜ், பணியாளர் சங்க  நிர்வாகி மனோகரன், ஓய்வுபெற்ற தொழி லாளர் சங்க நிர்வாகி கந்தசாமி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.