மேட்டுபாளையம், பிப்.12- நூல் விலையில் ஏற்பட்டுள்ள கடும் சரிவால் நூல் தயாரிப்பு ஆலைகளில் பல கோடி மதிப்பிலான நூல் மூட் டைகள் தேக்கமடைந்துள்ளன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல் தயாரிப்பு ஸ்பின்னிங் மில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகள் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் உள்ளூரில் பஞ்சு கொள்முதல் செய்து 40 ஆம் எண் மற்றும் 60 ஆம் எண் நூல் களை உற்பத்தி செய்கின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின் றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நூல் விலை சரிந்து கொண்டே செல்கிறது. 60 ஆம் எண் ஆட்டோ கோனார் நூல் ஐம்பது கிலோ மூட்டை விலை கடந்த வாரம் ரூ. 11,500 க்கு விற்றக்கப்பட்டது. தற்போது ரூ. 10,500 ஆக குறைந்து விட்டது. இதே போல் 40 ஆம் எண் நூல் ஐம்பது கிலோ மூட்டை ரூ.9,700 லிருந்து ரூ.9,200 ஆக குறைந்து விட்டது. அதே நேரத்தில், நூல் தயாரிப்பிற்கான பஞ்சு விலை 356 கிலோ கொண்ட ஒரு கண்டி 42 ரூபாயாகவே நீடிக்கிறது. இந்நிலையில் நூல் விலையின் தொடர் சரி வானது ஸ்பின்னிங் ஆலைகளை கலக்கத்தில் ஆழ்த்தி யுள்ளது. நூல் விலை மீண்டும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் பல ஆலைகள் நூல் மூட்டைகளை விற்காமல் இருப்பு வைத் துள்ளன. இதனால் இப்பகுதியில் மட்டும் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான நூல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.