சென்னை, மே 13 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாட்டில் புதனன்று (மே 13) செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர். கொரோனா தொற்று ஊரடங்கால் அரசு மருத்துவமனைகளில் ரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தன்னார் லர்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து இந்திய செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இணைந்து இந்த முகாமை நடத்தின. நிகழ்வுக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன் தலைமையில் தலைமை தாங்கினார். வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன், மாநில துணைத்தலைவர் பிரியசித்ரா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் தாமோதரன், மாவட்டத் தலைவர் லெனின், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் கந்தன்கருணை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்த இளை ஞர்களுக்கு சங்கத்தின் நிர்வாகிகள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.