கோபி, செப். 22- கோபிசெட்டிபாளை யம் பகுதியில் 8 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பனை விதைகளைத் தொண்டு நிறுவனத்தினர், பொது மக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து விதைத்த னர். நிலத்தடி நீரை சேமிக்க தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் பணியில் சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல் படுகின்றதன. இதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யத்திற்குட்பட்ட காசிபாளையம் பகுதியில் தமிழமுது தொண்டு நிறுவனத்தின் சார்பில் 2,555 பனை விதைகளைக் குளக்கரைகள், சாலையோரங்கள், வாய்க்கால்கரைகளில் விதைத்தனர். இதேபோல், கோபி பசுமை காக்கும் கரங்கள் இயக்கத்தின் சார்பில் வேட்டைகாரன்கோயில், கெட்டிச்செவி யூர், செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 6,500 பனை விதைகளை நீர் நிலைகளின் அருகிலும், ஏரிக்கரைகளிலும் விதைக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் விவசாயிகள், இளைஞர் கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்து வருகின்றனர். விதைப்பது மட்டுமின்றி வாரந்தோறும் கண்காணித்து தண்ணீர் ஊற்றி வளர்பதாகவும் கூறினர். மேலும் வளரும் தலைமுறையினருக்குப் பனை மரங்களின் பயன்கள் குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிரா மங்கள் தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி களையும் மேற்கொள்ளப்படுகிறது.