tamilnadu

img

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கை

சேலம், மார்ச் 15- கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த தெற்கு ரயில்வே சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளபட்டு வருகி றது என சேலம் ரயில்வே கோட்ட மேலா ளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளதாவது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கிருமியால் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து உள்ளனர். இந்தநிலையில் அணைத்து நாடு களும் வைரஸ் கிருமிகள் பரவாமல் இருக்க அவசரநிலை பிரகடனம், பள்ளி கல்லூரிக ளுக்கு விடுமுறை உள்ளிட்ட தடுப்பு நடவ டிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக ளுக்கிடையில், தெற்கு ரயில்வேயின் முதன்மை பராமரிப்பு ரயில்களின் அனைத்து இடங்களிலும்  கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றன. கோவிட்-19க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆடியோ அறிவிப்பு மற்றும் வீடியோக் கள் வழக்கமான முறையில் இயக்கப்படு கின்றன.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக  தெற்கு ரயில்வே ஏசி கோச் பயணிக ளுக்கு கம்பளி போர்வைகளை வழங்கு வதை திரும்பப் பெற்றுள்ளது.  தெற்கு ரயில்வே அனைத்து வகை ஏசி பெட்டி களிலும் திரைச்சீலைகளை அகற்றத் தொடங்கியுள்ளது என தெரிவித்தார்.  இதேபோல், தமிழகத்தில் சர்வதேச விமான நிலையத்தில் மட்டுமல்லாது உள் நாட்டு விமான நிலையத்திலும் கோவிட்-19 வைரஸ் கிருமிகளை தடுக்கும் பணியை தீவிரமாக தமிழக சுகாதாரத்துறை செய்து வருகிறது. சேலம் விமான நிலையத்திலும் முகாம் அமைத்து தீவிர தடுப்பு நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித் துள்ளார். இதேபோல், தமிழகத்தில் உள்ள சர்வ தேச விமான நிலையங்களில் வெளி நாட்டு பயணிகளிடமிருந்து வைரஸ் தொற்று பரவாமல் இருக்க விமான சேவை நிறுத்தம், பயணிகளை தீவிமாக பரி சோதனை செய்வது மற்றும் விமான நிலைய வளாகத்தில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரமாக செய்து வருகிறது. மேலும், சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமல் லாது, தற்பொழுது உள்நாட்டு விமான நிலையங்களிலும் தமிழக சுகாதாரத் துறை முகாம் அமைத்து பயணிகளை பரி சோதித்து வருகின்றனர். இதன் அடிப்படை யில் திங்களன்று சேலம் விமான நிலையத் தில் சேலத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் மற்றும் சென்னையில் இருந்து சேலம் வந்த பயணிகளை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறதா என சுகா தாரதுறையினர் முகாம் அமைத்து தீவிரமாக பரிசோதனைசெய்த பின் பயணிகளை அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.