tamilnadu

வெளிநாட்டிலிருந்து வந்து வாக்களித்த மென்பொருள் பொறியாளர்

சேலம், ஏப். 19-ஜனநாயக கடமையாற்ற வெளிநாட்டிலிருந்து வந்து மென்பொருள் பொறியாளர் வாக்களித்தார்.ஹாங்காங் நாட்டில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக செயல்பட்டு வருபவர்விஜயகுமார். இவர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விமானம் மூலம் புதனன்று நள்ளிரவு 12.30 மணியளவில் பெங்களூரு வந்து சேர்ந்தார். அங்கிருந்து பேருந்து மூலம் சொந்த ஊரான சங்ககிரி தொகுதிக்குட்பட்ட கத்தேரிஊராட்சி கொடாரபாளையத்திற்கு வந்தார். வியாழனன்று வாக்குச்சாவடியை அடைந்த விஜயகுமார் தனது வாக்கினை பதிவு செய்தார்.

;