tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டி பணிகள்: ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர், மார்ச் 6- திருப்பூர் மாநகராட்சி பகுதி யில் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று மிடுக் கான நகரம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேற்கொள் ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் முன்னிலை வகித் தார். இக்கூட்டத்தில், திருப்பூர் மாந கராட்சியின் விரிவடைந்த பகுதி களில் குடிநீர்  அபிவிருத்தி திட்டம், திறந்தவெளி காலியிடம் மேம் பாடு செய்தல், ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் கட்டுப் பாட்டு மையம், புதிய குடிநீர் திட் டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், மாநாட்டு அரங் கம் கட்டுதல், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம், எல்.இ.டி. தெரு விளக்குகள் சூரிய ஒளி மூலம் மின் சாரம் தயாரிக்கும் ஆலை அமைத் தல், தினசரி மற்றும் வாரச்சந்தை மேம்படுத்துதல் மற்றும் பூ மற்றும் மீன் மார்க்கெட் மேம்படுத்துதல், ஓடைகள் மேம்பாடு செய்தல் சாலை மேம்படுத்துதல், சங்கிலிப் பள்ளம் ஓடை ஓரமாக தாராபுரம் சாலை முதல் நொய்யல் ஆற்றின் தெற்கு கரையோரம் வரை மேம் பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணி களுக்காக மத்திய அரசு திருப்பூர் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி யாக அறிவித்தது. அதற்காக ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. மேலும்,  மாநகராட்சி பகுதி யில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சித் திட் டப்பணிகள் குறித்தும் மற்றும் திட்ட விவரங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவில் முடித்திட வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், திருப்பூர் வருவாய் கோட்டாட்சி யர் கவிதா, மாநகர பொறியா ளர் ரவி, மாநகராட்சி செயற்பொறி யாளாகள் திருமுருகன், முகமது சபியுல்லா, உதவி  ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், திருப் பூர் தொழில்துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.