tamilnadu

img

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கடையடைப்பு - ஆர்ப்பாட்டம்

சேலம், மார்ச் 6- குடியுரிமை சட்டத்தை   எதிர்த்து வெள்ளி யன்று ஓமலூரில் கடையடைப்பு நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூரில் பேருந்து நிலையம் அருகே வட்டார ஜமாத்துல் உலமா சபை, அனைத்து மஹல்லா ஜமாத்துக்கள் இஸ்லாமிய இயக்கங்கள்   சார்பில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப் பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு ஐக்கிய ஜமாத் மாவட்டச் செய லாளர் முகமது ஷெரீப் தலைமை தாங்கி னார். இதில் சிபிஎம் வட்டக்குழு செய லாளர் பி.அரியாக்கவுண்டர், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஹாரூன்ர‌ஷீத், திமுக மாவட்ட செய லாளர் சிவசங்கர், மாநில சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் சுபாசந்திரசேகர், ஜெயங்கொண்டம் தலைமை இமாம் சைபுதீன், ஜமாத்துல் உலமா தலைவர் காஜாமைதீன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.   மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் கருணாநிதி, மதிமுக மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தமுமுக மாவட்ட செயலாளர் முஸ்தபா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கமாலுத் தீன், மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, தி.க மண்டல தலைவர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.