tamilnadu

img

மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு குழுவை அமைத்திடுக

கோவை, ஆக.18- கோவை மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்களின் நலன் காக்கவும், அவ்வப்போது ஏற்படும் கூலி உள்ளிட்ட பிரச்சனைகளை பேசி தீர்க்கவும் மாவட்ட ஆட்சி யர் தலைமையில் முத்தரப்பு குழுவை அமைக்க  வேண்டும் என சுமைப்பணி தொழிலாளர் சங்க  மாநாடு வலியுறுத்தியுள்ளது.  கோவை மாவட்ட சிஐடியு சுமைப்பணி தொழி லாளர் சங்கத்தின் 16 ஆவது மாநாடு வடகோவை திருவிக படிப்பகத்தில் எம்.ராதாகிருஷ்ணன் தலை மையில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் சங்க கொடியை ஏ.சகாப்தீன் ஏற்றிவைத்தார். மாவட்ட  துணை செயலாளர் எம்.எஸ்.பீர்முகமது  வரவேற் புரையாற்றினார். மாநாட்டை துவக்கிவைத்து சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் சிறப்பு ரையாற்றினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பாபு, பொருளாளர் ஆர்.ராஜன் ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர்.

தீர்மானங்கள்

 கோவை மாவட்டத்தில் உள்ள பல நிறுவ னங்களில் சுமைப்பணி தொழிலாளர்கள் கிரேன், வெயிட்லிப்ட் போன்ற நவீன இயந்திரங்களை கொண்டு வேலைசெய்து வருகிறார்கள். இதன் காரணமாக ஏற்படும் விபத்துகளில் சுமைப்பணி தொழிலாளர்களே பாதிக்கப்படுகின்றனர். சில தொழிலாளர்கள் மரணமும் அடைந்து விடுகிறார் கள். இதுபோன்ற நிலையில் இவர்களின் குடும் பம் நிர்க்கதியாக நிற்கிறது. விபத்தில் காய மடைந்தவர்கள் மீண்டு வருவதற்கு ஆகும் மருத்துவ செலவையும் இவர்களே மேற்கொள்வதால் கடனில் மூழ்கி சுமைப்பணி தொழிலாளர்களின் குடும்பம் பெரும் அவதிக்குள்ளாகிறது. இதனைக்கருத்தில் கொண்டு சுமைப்பணி தொழிலாளர் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிறுவனங்களே காப்பீட்டு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். கோவை மாநகர மக்களின் குடிநீர் உரிமையை பறிக்கும் சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை கோவை மாநகராட்சி ரத்து செய்ய  வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  இதனையடுத்து சங்கத்தின் புதிய தலைவராக எம்.ஏ.பாபு, பொதுச்செயலாளராக ஆர்.ராஜன், பொருளாளராக எம்.எஸ்.பீர்முகமது உள்ளிட்ட 13 பேர் கொண்ட நிர்வாகிகள் மற்றும் 21 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.  மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட துணை தலைவர் பி.கே.சுகுமாறன் உரையாற்றி னார். முடிவில் கே.ஜம்பு நன்றி கூறினார்.