tamilnadu

img

பல நாட்களாக தேங்கியிருக்கும் செப்டிக் கழிவுநீர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்

திருப்பூர், அக்.16 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் செப்டிக் கழிவுநீர் தேங்கி கிருமிகள் உற்பத்தியாகி வருகின்றன. அத்துடன் துர்நாற்ற மும் சேர்ந்து கொண்டு பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற் படுத்தி வருகிறது. ஆனால் இதைப் பற்றி அரசு நிர்வாகத்தினர் யாரும் கவனிக்காமல் அலட்சியமாக உள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தெற்கு பகுதி யில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குச் செல்லும் வழி யில் செப்டிக் கழிவுநீர்த் தொட்டி யில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி வெளியில் தேங்கி நிற்கிறது. இது அந்த பகுதியில் செல்லும் மக்களுக்கு துர்நாற் றத்தை ஏற்படுத்துவதுடன், கொசுக்கள், பூச்சிகள் உள்ளிட்ட  கிருமிகள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வரு கிறது. கடந்த சில நாட்களாக இந்த நிலை இருந்தபோதும் மாவட்ட ஆட்சியரகத்தைச் சேர்ந்த அலு வலர்கள் இதைப் பற்றி கவனிக் காமல் உள்ளனர். கடந்த திங்க ளன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கூட்டம் நடந்தபோது ஏராள மான பொது மக்கள் இந்த கழிவு நீர் துர்நாற்றத்தை கடந்துதான் அரங்கத்திற்குச் சென்றனர். இந்த இடத்துக்கு சில மீட்டர் தொலைவிலேயே ஆவின் பால கமும் செயல்படுகிறது.  தற்போது மழை பெய்து பல  பகுதிகளிலும் காய்ச்சல் பரவி வரும் நிலையில், மாவட்ட நிர் வாகம், உள்ளாட்சி அமைப்புகள் சுகாதாரம் பேணுவதற்காக கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள் ளும்படி பொது மக்களுக்கு அறிவு றுத்தி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் தலைமை அலுவலகக் கட்டிடத்திலேயே இதைப் பற்றி அலட்சியமாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அங்கு வந்த பொது மக்கள் கூறினர். அதிலும் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் உள்பட பல அரசு அலுவலர்கள் குடியிருப்பு மற்றும் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியும் உள்ள நிலை யில் செப்டிக் கழிவுநீர் தொட் டியை பழுது நீக்கி, கழிவுநீரை அகற்றி சுகாதாரம் பேண நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியருக்கு வலியு றுத்தி உள்ளனர்.