tamilnadu

img

பொள்ளாச்சி அருகே கலப்பட உரம் தயாரித்த குடோனுக்கு சீல் வைப்பு

பொள்ளாச்சி, ஆக. 1- பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளியில் கலப்பட  உரம் தயாரித்து வந்த குடோனுக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட போடி பாளையம் கிராமத்தில் இயற்கை உரங்கள் தயாரிக்கும் தனியாருக்கு சொந்தமான குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த குடோனில் கலப்பட உரம் தயாரிப் பதாக பொள்ளாச்சி வட்டாட்சியர் மற்றும் வேளாண்துறை அதிகாரிக ளுக்கு தகவல் கிடைத்தது. இத்தக வலின் பேரில் கலப்பட உரம் தயா ரிக்கும் இடத்திற்கு சென்ற பொள் ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல் வேளாண் துறை  அதிகாரி துளசி மணி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் 184  கலப்பட உர மூட்டைக ளும்,  சிறிய அளவிலான 10 கிலோ கொண்ட  பைகளும் சிக்கின. இதை யடுத்து அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கலப்பட உரம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட காளிதாஸ் என்பவரிடம் தொடர்ந்து  விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அதன் தொடர் நடவடிக்கையாக அனைத்து இடங் களிலும் ஆய்வுப்பணிகள் மேற் கொள்ள நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. இது போன்று முறையான உரிமம் பெறாமல் தர மற்ற உரங்கள் தயாரிக்கும்  ஆலை கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.