tamilnadu

img

காட்டுக்குள் வீசப்படும் விதை பந்துகள் வறட்சி பாதித்த வனத்தை பசுமையாக்க திட்டம்

மேட்டுப்பாளையம், ஆக.13- கோவை வனக்கோட்டத் திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக காப்புக்காட்டு பகுதிக்குள் 60 ஆயிரம் விதைப்பந்துகளை வீசும்  பணி துவங்கி நடைபெற்று வரு கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில், உயிர் சங்கிலியில் முக்கிய கண்ணிகளாக கருதப்ப டும் புலி மற்றும் யானைகள் மட்டு மின்றி சிறுத்தை, கரடி, காட் டெருது, மான் என ஏராளமான வன உயிரினங்கள் உள்ளன. மேலும் அடுத்ததடுதுள்ள மேட்டுப் பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி காடுகள் யானைகளின் முக்கிய வலசை பாதையாகவும் உள்ளது. மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய இவ்வனப்பகுதிகள் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை யின்றி வறட்சியின் பிடியில் சிக் கின. இதனால், ஏராளமான காட்டு மரங்கள் நீரின்றி காய்ந்து பட்டுப் போயின. இதன் காரணமாக வனத்திற்குள் மரங்கள் குறைந்து பொட்டல் வெளிகள் அதிகரிக்க துவங்கின. இந்நிலையில் தற்போது இப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் வனத்தின் வறட்சி மறைய துவங்கியுள்ளது. மேலும், இந்த தொடர் மழையை பயன்படுத்தி வறட்சியால் காலியாக காணப்படும் வனப்பகுதிகளில் மீண்டும் மரங்களை வளர்க்க திட்டமிடப்பட்டது. இதன்படி 60  ஆயிரம் விதைப்பந்துகள் உரு வாக்கப்பட்டு இவற்றை காட்டுக் குள் வீசும் பணி செவ்வாயன்று துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும், வனத்துறை மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர் கள் கொண்ட ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு முதற்கட்டமாக 10 ஆயிரம் விதைப்பந்துகள் வனத்திற்குள் வீசி விதைக்கப் பட்டது. மழை பெய்யும் போது மண் உருண்டை கரைந்து விதை மண்ணுக்குள் செல்லும். ஈரப்பதம் தொடர்வதால் இவை முளைக்க துவங்கும். இவை செடியாக வளரும் போதே வனத்தில் வாழும் மான், காட்டெருது போன்றவை கடித்து சேதப்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் தற்போது காட்டிற் குள் வீசப்படும் விதை பந்துகள் அனைத்தும் வேம்பு மர விதைக ளால் உருவாக்கப்பட்டுள்ளன. வேம்பு மரச்செடிகளை இவை உண்ணாது என்பதோடு இம்மரம் வளர பராமரிப்பு தேவையில்லை என்பதால் வேம்பு மர விதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் இன்னும் ஓரிரு நாளில் 60 ஆயிரம் விதை பந்துகளும் காட்டிற்குள் தேர்வு செய்யப்படும் இடங்களில் வீசப்படும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.