சேலம், மே 29-சேலம் செவ்வாய்பேட்டையில் மேம்பாலம் கட்டுவதற்குஇடையூறாக ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்றும் பணியில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு 80 சதவிகிதம்முடிவடைந்து. இந்நிலையில், அப்பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 25 கடைகளின் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக இரண்டு ஆண்டுகளாகவழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில் பொதுமக்களுக்கு தேவையான இந்த மேம்பாலத்தின்பணிகளை நிறுத்த முடியாது.ஒரு மாத காலத்திற்குள் கடைகளை காலி செய்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு வழங்கியது. மேலும் கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தின் வாயிலாகவே இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தது.இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த காரணத்தினால் அரசு பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் இருந்தது. தற்பொழுது தேர்தல் முடிந்து நடத்தை விதிதளர்த்தப்பட்ட நிலையில் ஒருநாள் முன்பே கடை உரிமையாளர்களுக்கு கடைகளை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத் துறை சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் புதனன்றுராட்சத கிரேன் உதவியுடன் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளைஅகற்றும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதற்காக மாநகராட்சி, மின்சாரத் துறை, வருவாய்த் துறை சார்பில் 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக உதவி ஆணையாளர் தங்கதுரை தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே செவ்வாய்பேட்டை மேம்பாலம் கட்டும்பணிகள் நான்கு மாதங்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் நெடுஞ்சாலை துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.