tamilnadu

img

குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சேலம் போலீசார் திணறல்

எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., குற்றச்சாட்டு

சேலம், பிப்.14- கொலை, கொள்ளை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறுவதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றம்சாட்டி உள்ளார்.  சேலம் கோட்டை பகுதி யில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்,   12 அரசு பள்ளிகளுக்கு சேலம் நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப் பிலான மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக் கக்கூடிய இருக்கைகளை வழங்கினார்.  அதனைத் தொடர்ந்து எஸ்.ஆர்.பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது, மாணவிகளின் பாதுகாப்புக்காக சேலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி களிலும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து சிசிடிவி கேமராக்கள் பொருத்த  நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச் சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் வீடுகளில் கொலை, கொள்ளை சம்ப வங்கள் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. இக்குற்றவாளிகளை பிடிக்க முடி யாமல் போலீசார் திணறி வருவதால் பொது மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வரு கின்றனர். சேலத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களை தடுக்க தனிப்படை அமைத்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என   அவர் வலியுறுத்தினார்.