tamilnadu

பொள்ளாச்சி - வால்பாறை இடையே கூடுதல் பேருந்துகளை இயக்கிடுக

பொள்ளாச்சி, செப். 10- பொள்ளாச்சி - வால்பாறை இடையே பொதுமக்க ளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை அதிகப்படுத்திட வேண்டுமென சிஐடியு தேயிலை தோட்டத் தொழி லாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பரமசிவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, கோவை மாவட்டம், பொள்ளாச்சி - வால்பாறை இடையே 24 அரசுப் பேருந்துகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வந்தன.  இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது தளர்வுகள் அறி விக்கப்பட்டு பொதுபோக்குவரத்து நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆனால், பொள்ளாச்சி - வால்பாறை பணி மனையிலிருந்து ஏற்கனவே இயக்கப்பட்ட பேருந்து களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள் ளது. இதனால் பேருந்திற்காக நீண்ட வரிசையில் மக் கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கூடுதலாக பேருந் துகள் இயக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன் வர வேண்டுமென அந்த அறிக்கையில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

;