கோவை, நவ. 5 – கோவையில் ஆளும் கட்சியி னர் நடத்தும் போராட்டங்க ளுக்கு எவ்வித தடையும் விதிக் காமல் அனுமதி தரும் காவல்து றையினர், எதிர்க்கட்சிகளின் ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கும் நடவடிக் கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் பின்வ ருமாறு, உலகையே எழுச்சி கொள்ள வைத்த உன்னத புரட்சி தினமாக நவம்பர் 7-ஐ இடதுசா ரிகள் கடைபிடித்து வருகின்ற னர். இந்நாளில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பேரணி, கருத் தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். இந்நி லையில், கொரோனா அச்சுறுத் தல் காரணமாக தனிமனித இடை வெளியோடு இந்தாண்டு உறுதி மொழியேற்பு நிகழ்ச்சியை, கோவை சிவானந்த காலனி தண் ணீர் தொட்டி அருகில் நடத்த மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில் இரத்தினபுரி காவல் நிலை யத்தில் அனுமதி கோரப்பட் டிருந்தது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தி ருப்பதை வன்மையாக கண்டி கின்றோம். கொரோனா தொற்று பரவும் என்றும், 144 தடை உத்தரவிற்கு பங்கம் விளைவிக்கும் என்றும் அனுமதி மறுப்பிற்கு காவல்து றையினர் காணரம் கூறுவது ஏற்புடையதல்ல. முன்னதாக, ஆளும் கட்சியினர் கடந்த வாரத் தில் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட பகுதியில் மேடை அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதற்கு மாநகர காவல் துறை அனுமதி அளித்துள்ளது. 144 தடை உத்தரவு, கொரோனா பரவல் போன்றவை ஆளும் கட்சிக்கு பொருந்தாதா ?.
இதேபோல், பிளக்ஸ் போர்டு வைக்க உயர்நீதிமன்றம் தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், கோவையில் ஆளும் கட்சியினர் வைத்துள்ள பிளக்ஸ் களை காவல்துறை எப்படி அனு மதிக்கிறது. எதிர்கட்சிகள் மற்றும் அமைப்புகள் மூலம் நடை பெறும் நிகழ்ச்சிகளுக்கு போஸ் டர் ஒட்டினால் தடைவிதிக்கும் காவல்துறை, ஆளும் கட்சியி னர் மாநகரம் முழுவதும் போஸ் டர் ஒட்ட அனுமதி அளிக்கிறது. இவ்வாறு ஆளும் கட்சிக்கும், மதவாத அமைப்புகளுக்கும் ஆத ரவாக மட்டும் செயல்படும் மாந கர காவல் துறையின் ஜனநாயக விரோத நடவடிக்கையை மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டக்குழு வன்மையாக கண்டிக்கி றது. மேலும், அனைத்து தரப்பு ஜனநாய அமைப்புகளின் போராட்ட இயக்கங்களுக்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டுமென அத்தீர்மானத் தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.