திருப்பூர், ஜூலை 4 – தமிழக நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநரின் அடாவடித் தனமான, தொழிற்சங்க விரோதப் போக்கைக் கண்டித்தும், ஐஏஎஸ் அதிகாரியை முதன்மை இயக்குநர் பொறுப்பில் நியமிக்க வலியு றுத்தியும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத் தினர் முகத்தில் கண், காது, வாயை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு மௌனப் போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கல்லூரி சாலை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பாக புதனன்று நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு கோட்டத் தலைவர் என்.சிவக்குமாரன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி கோட்டச் செய லாளர் ஆர்.ராமன் உரையாற்றி னார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன், தொழிற் பயிற்சி அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மு.சீனிவாசன், சத்துணவு ஊழியர் சங்க மாநகரத் தலைவர் பி.மகேந்திரபூபதி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இதில் சாலைப் பணியாளர்கள் முகங்களில் கண், காது, வாயில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
தாராபுரம்
இதேபோல் வியாழனன்று தாராபுரம் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு கண், காது, வாயை கருப்புத்துணியால் கட்டிக் கொண்டு மௌனப் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் வெங்கிடு சாமி தலைமை வகித்தார். இப்போ ராட்டத்தில் சாலைப்பணியாளர் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.