tamilnadu

img

தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு கோரி திருப்பூரில் சாலைப் பணியாளர்கள் தர்ணா

திருப்பூர், நவ. 26– திருப்பூர் மாவட்டத்தில் சாலைப் பணியாளர்களில் தகுதியானவர்க ளுக்கு அரசாணைப்படி சாலை ஆய்வா ளர் நிலை II பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சாலைப் பணி யாளர் சங்கத்தினர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் காலேஜ் ரோடு கண்கா ணிப்புப் பொறியாளர் அலுவலகம் முன்பாக திங்களன்று நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிர மணியன் தலைமை வகித்தார். கோட் டத் தலைவர் சிவக்குமார், கோட்டச் செயலாளர்கள் ஆர்.ராமன், எல்.தில் லையப்பன், பி.பழனிச்சாமி, கோட்டத் தலைவர்கள் செவந்திலிங்கம், வெங்கி டுசாமி உள்பட திரளானோர் பங் கேற்று கோரிக்கை முழக்கம் எழுப் பினர். சாலைப் பராமரிப்புப் பணி மேற் கொள்ள கருவி, தளவாடங்கள் மற் றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரியும், சாலைப் பணியாளர் அம்ச ராஜிற்கு ஆறு மாத காலமாக பணி மாறுதல் உத்தரவு வழங்காமல் பழி வாங்கும் போக்கைக் கண்டித்தும் நிர் வாகிகள் இரா.தமிழ், சு.செந்தில்நா தன், வே.கணேசன், தி.இராஜமாணிக் கம் உள்ளிட்டோர் பேசினர். நிறை வாக மாநிலப் பொதுச் செயலாளர் ஆ. அம்சராஜ் நிறைவுரை ஆற்றினார். தாராபுரம் கோட்டப் பொருளாளர் எஸ்.முருகசாமி நன்றி கூறினார்.