tamilnadu

img

பாலக்காடு அருகே சாலை விபத்து: கோவையைச் சேர்ந்த 4 பேர் பலி

கேரள மாநிலம் பாலக்காடு அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி கோவையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கேரள மாநிலம் பாலக்காடு அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோவையை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாலக்காடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;