இளம்பிள்ளை,டிச.17- சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றி யத்தில் உள்ள அரசுப் பள்ளி அருகே தேங்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துமாறு பெற் றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத் திற்குட்பட்ட சின்ன சீரகாபாடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியை ஓட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளியின் முன்பு குட்டை போல் தேங்கி உள்ளன. இதனால் நுழைவு வாயில் மற்றும் சுற்றுச்சுவர் எந்நேரத் திலும் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தி யாகுகின்றது. இந்த கழிவுநீர் தேக்கத்தால் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்றி தூய்மைப் படுத்திக் கொடுக் குமாறு வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் மற்றும் தொடக்க கல்வி அலு வலர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுக் கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தேங்கி உள்ள கழிவு நீரை அப்புறப் படுத்த சேலம் மாவட்ட நிர்வாகமும், சுகா தாரத்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.