tamilnadu

img

சிறை மீண்ட விவசாய இயக்கத் தலைவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு

திருப்பூர், அக். 12 – விவசாயிகளின் நில உரிமைக் காகப் போராடியதால் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கப்பட்ட உயர் மின்கோபுர எதிர்ப்பு கூட்டி யக்க நிர்வாகிகள் சனியன்று பிணை யில் விடுவிக்கப்பட்டனர். அவர்க ளுக்கு கோவை மத்திய சிறை வாயிலி லும், பல்லடத்திலும் விவசாயிகள் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக் கப்பட்டது. குண்டடம் அருகே கடந்த செப்டம் பர் மாதம் 13ஆம் தேதி உயர்மின் கோபுரம் நில அளவைப் பணியை,  அத்துமீறி விவசாய விளைநிலங்களில் மேற்கொள்ள வந்த வருவாய்த் துறை  மற்றும் பவர்கிரீட் நிறுவன அலுவ லர்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப் புத் தெரிவித்தனர்.  ஆனால் குண்டடம் காவல் துறையினர் சட்டத்துக்குப் புறம்பாக விவசாய இயக்கத்தினரை கைது செய்தனர். உயர் மின் கோபு ரங்களுக்கு எதிரான விவசாய சங்கங் களின் கூட்டியக்கத்தின் தலைவர்கள் வழக்கறிஞர் ஈசன், பி.ஆர்.சண்முக சுந்தரம், முத்து விஸ்வநாதன், பார்த்த சாரதி, தங்கமுத்து ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து, பொய் வழக்குப் பதிவு செய்து பிணையில் வர முடியாதபடி சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கிலிருந்து நிர்வாகிகளை சிறை மீட்க கூட்டி யக்கத்தினர் தீவிர முயற்சி மேற்கொண் டனர். இதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட் டது. ஒரு மாத காலம் கோவை மத் திய சிறையில் அடைக்கப்பட்டி ருந்தவர்கள் சனியன்று அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர். சிறை வாசலில் வழக்கறிஞர் ஈசன், பி.ஆர்.சண்முக சுந்தரம், முத்து விஸ்வநாதன், பார்த்த சாரதி, தங்கமுத்து ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட் டது. இதில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று வரவேற்ற னர்.

பல்லடத்தில் வரவேற்பு

இதன் தொடர்ச்சியாக சனியன்று பிற்பகல் 4 மணியளவில் பல்லடம் கிரீன் பார்க் அரங்கில் சிறை மீண் டோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலை வர் எஸ்.ஆர்.மதுசூதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், தற்சார்பு விவ சாயிகள் சங்க தலைவர் கி.வெ.பொன்னையன்,  தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில துணைத் தலைவர் ஏ.எம்.முனுசாமி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில துணைத் தலைவர் (சிபிஐ) துளசிமணி, திமுக வழக்கறி ஞர் குமார், மதிமுக பாலு, காங்கிரஸ் தியாகராஜன், கொமதேக நிர்வாகி ராஜேந்திரன், உழவர் உழைப்பாளர் கட்சியின் சோமசுந்தரம், கட்சி சார் பற்ற விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சிவக்குமார், சென்னிமலை பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி, கூட்டியக்க நிர்வாகிகள் கவின், முத்து, த.வி.ச.மாவட்ட செயலாளர்கள் திருப் பூர் ஆர்.குமார், நாமக்கல் பி.பெருமாள், சேலம் ராமமூர்த்தி உட்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், ஈசன் உள்ளிட் டோர் மீது பொய் வழக்கு கொடுத்த தாராபுரம் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி யும், பொய் வழக்கை வாபஸ் பெறக் கோரியும் வரும் 14ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் பெருந்திரள் முறையீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக இந்நிகழ்ச்சியில் பல்லடம் தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் வை.பழனிச்சாமி வர வேற்றார். நிகழ்வின் நிறைவில் சிறை சென்றவர்கள் சார்பில் வழக்கறி ஞர் ஈசன் ஏற்புரை ஆற்றினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.