நாமக்கல், ஜூலை 31- புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் மற்றும் திருச்செங்கோடு நகர மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.சரவணன் சிறப்பு ரையாற்றினார்.
புதிய நிர்வாகிகள்
இம்மாநாட்டில் சங்கத்தின் எலச்சிபாளையம் ஒன்றிய தலைவராக கோபி, செயலாளராக சரவணன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. இதேபோல், திருச்செங்கோடு நகர தலைவராக தனுஷ், செயலாளராக நந்தினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மாணவர்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும். மத்திய பாஜக அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.