பொள்ளாச்சி, பிப். 4- மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை திரும்பப்பெற கோரி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது . மத்திய அரசின் குடியு ரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங் கள் நடைபெற்று வருகிறது. தமிகத்திலும் திமுக கூட்டணி கட்சியின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. இதன்தொ டர்ச்சியாக சிஏஏ, என்ஆர்சி, என்பி ஆர் சட்டத்திற்கு எதிராக தமிழ கம் முழுவதும் கையெழுத்து இயக் கத்தை நடத்துவது என மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் முடிவெடுத்து அறி வித்துள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்துக்களை பெற்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர்களுக்கு அனுப்பு வது என முடிவெடுக்கப்பட்டுள் ளது. இதனையடுத்து ஞாயிறன்று மாநிலம் முழுவதும் திமுக, காங்கி ரஸ், சிபிஎம், மதிமுக, சிபிஐ, விசிக, கொமதேக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் அனைத்து பகுதிகளிலும் கையெழுத்து இயக் கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு செவ்வா யன்று நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு திமுக பொள்ளாச்சி நகர செயலாளர் வரதராஜ் தலைமை வகித்தார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் வெளியீட்டுச் செயலாளர் இரா.மனோகரன் மற்றும் சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா செயலா ளர் கே.மகாலிங்கம், தபெதிக நகரச் செயலாளர் அசோக், விசிக மாவட்டச் செயலாளர் ச.பிரபு, மதி முக மாவட்டச் செயலாளர் குகன் மில் செந்தில் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதேபோல், ஆனைமலை அடுத்த காளியாபுரம் பிரிவில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு திமுக காளியாபுரம் பொறுப்பாளர் கிட்டுசாமி மற்றும் திமுக ஆதி திராவிடர் நலக்குழு பொறுப்பாளர் சுப்ரமணியம், சிபிஎம் பகுதி செயலாளர் முருகன், தபெதிக பொறுப்பாளர் தமிழ், விசிக பொறுப்பாளர் விசயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை
இதேபோல்,கோவை கிழக்கு நகரக்குழு காமராஜபுரம் பகுதியில் நடைபெற்ற கையெழுத்து இயக் கத்தில் திமுக, சிபிஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளா னோர் பங்கேற்றனர்.