tamilnadu

img

வீடுகள் கட்ட விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுக

குன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

உதகை, நவ.13- நீலகிரி மாவட்டம் முழுவதும் 283 இடங்களில் வீடுகள் கட்ட விதிக்கப்பட்ட தடை உத்தரவை  உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் குறிப்பிட்ட 283 பகுதிகளில் வீடுகள் கட்டவும், வீடுகளை புரனமைக்க கூடாது என அண்மையில் மாவட்ட ஆட்சி யரால் ஆணை ஒன்று பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவால் ஏழை, எளிய மக்கள் வீடுகள் கட்டவோ, தங்கள் வீடுகளை புர னமைத்திட இனி முடியாது. மேலும், தேயிலை விவசாயம், சுற்றுலாவுக்கு அடுத்து கட்டிட தொழிலில் தான் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். இதனால் தொழில் பாதிப்பு ஏற்பட்டு மாவட்டத்தின் பொருளாதாரமும் பாதிக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது.

இதன்ஒருபகுதியாக புத னன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்னூர் இடைக் கமிட்டியின் சார்பில் வி.பி. தெருவில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு இடைக்கமிட்டி செயலாளர் ஜெ.ஆல்தொரை தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.சுப்ரமணி, இளங்கோ உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டவர்களை  குன்னூர் கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் அழைத்து பேச்சுவார்த்தை நடத் தினார். இதில் உடன்பாடு ஏற் படவில்லை.  இதைத்தொடர்ந்து வீடுகள் கட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வரை அடுத் தடுத்து தொடர் போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்து அனைவரும் கலைந்து சென் றனர்.

முழு அடைப்பு போராட்டம்

நீலகிரியில் 283 பகுதிகளில் வீடுகள் கட்ட போடப்பட்ட தடையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோத்தகிரி, உதகை, மஞ்சூர் பகுதிகளில் வரும் நவம்பர் 17 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது.  இதேபோல் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து சமூகநல அமைப்புக்கள் இணைந்து நவம் பர் 25 ஆம் தேதியன்று உதகை யில் முழு அடைப்பு போராட்டத் திற்கு அழைப்பு விடுத்ததுள்ளது. மேலும், காந்தி திடலில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்திடவும் முடிவு செய்யப்பட் டுள்ளது.