அவிநாசி, நவ. 22- அவிநாசி அருகே வஞ்சிபாளை யத்தில் குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அவிநாசி வட்டம், புதுப்பாளை யம், கணியம்பூண்டி ஊராட்சிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப் படுத்தும் வகையில் கடந்த ஆண்டு சாலைஅகலப்படுத்தும் பணி துவங் கப்பட்டது. அப்பணிகள் இன்றும் முடிவடையாமல் உள்ளது. மேலும், குடிநீர் குழாய் சேதமடைந்து ாதக்கணக்கில் குடிநீர் இல்லாமல் வஞ்சிபாளையம் பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இவற்றை விரைந்து சீரமைக்கவேண்டும். கணியம்பூண்டி, வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் கணியம் பூண்டி, புதுப்பாளையம் பகுதி ஏழை, எளிய மக்களுக்கு 50 சதவி கிதம் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிய பொதுக் குடிநீர் குழாய் ஏற்படுத்தித் தர வேண்டும். முருகம்பாளையம் சாலை, பொன்ரா புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாக் கடை வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவிநாசி கிராம கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் இயக்குனர் குட்டி (எ) வி.மோகன சுந்தரம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கே.பாலசுப்பிர மணியம், கே.குமாரவேல், எம்.ராம கிருஷ்ணன், எம்.செல்வராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநி லக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட குழு உறுப் பினர் பி.முத்துசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.முரு கன், ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம் ஆகியோர் சிறப் புரையாற்றினர். விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி ஆர்.பழனிசாமி, கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர் வாகி ஆர்.வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப் பாட்டத்தின் முடிவில் வி.சங்கர் நன்றி கூறினார்.