உதகை, பிப்.21- நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியம், எடப் பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வியாழ னன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.44 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம், எடப்பள்ளி ஊராட்சிக்குட் பட்ட இளித்தொரையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப் பில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டிடம், ரூ.5 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நடைபாதை, ரூ.6 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் பணி, கண்ணய்யன் வீடு முதல் மெயின்ரோடு வரை ரூ.8 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நடைபாதை மற்றும் கழிவுநீர் கால்வாய் பணி, அங்கன்வாடி மையம் என ஆக மொத்தம் ரூ.44 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மற்றும் முடிக்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமன், வசந்தா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர் கள் உட்பட பலர் உடனிருந்தனர்.