நீலகிரி மாவட்டம் உதகையில் செவ்வாயன்று அரசு ஊழியர் இல்லத்தில் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக ஓய்வூதியர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு இக்கூட்டமைப்பின் தலைவர் எச்.இ.சஞ்சீவி ராஜ் தலைமை வகித்தார்.இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.