பொள்ளாச்சி, ஜுன் 30- பொள்ளாச்சி அடுத்த ஆர்.பொன்னாபுரம் அருகே புதர் மன்டி பயன்பாடற்ற நிழற்குடையினை சீரமைக்க அப்ப குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன் றியத்திற்குட்பட்ட ஆர்.பொன்னாபுரம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பேருந்து நிழற்குடை பழுதடைந்து, புதர்மண்டியுள்ளது. இதனால்மழை காலங்களிலும், வெயிற்காலங்களிலும் அப்பகுதி மக்கள்பேருந்திற்காக வெட்ட வெளியிலேயே காத்திருக் கின்றனர். உடனடியாக பழுதடைந்தபேருந்து நிழற்கு டையினை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழிவகை செய்ய வேண்டும் எனஅப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.