tamilnadu

img

வள்ளிமதுரை அணையை தூர்வாரி படகு இல்லம் அமைக்க கோரிக்கை

தருமபுரி, அக்.8- வறண்டு கிடக்கும்  வள்ளி மதுரை வரட்டாறு அணையை தூர்வாரி படகு  இல்லம் அமைக்க வேண் டும் என விவசாயிகள்,  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைப்பகுதியில் உள்ள வள்ளிமதுரையில் கடந்த 2007ஆம் ஆண்டு  வரட்டாறுஅணை கட்டப் பட்டு திறக்கப்பட்டது. மழை காலங் களில் வரும் நீர் சித்தேரி மலைப்பகுதி களிலிருந்து இந்த நீர்ப்பாசன அணையில்  வந்து தேங்கி நிற்கும். தருமபுரி மாவட் டத்தில் தற்போது வறட்சி நிலவுவதால்  குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பெரும்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடை களுக்கு தீவனங்களும் போதிய அளவில்  கிடைப்பதில்லை. வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்க அணையில் 110.3 கனஅடி நீர் கொள்ளளவில் தேக்கி வைத்து 25 ஏரிகளுக்கு  நீர்ப்பாசன  ஓடை வழியாக விவசாயிகள் பயன்பெறும்  வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அணை தண்ணீரின்றி வறண்டு கிடப்பதால் விவசாயத்திற்கும் மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. அணையின் இடதுபுற பகுதியில்  சுமார் 100 ஏக்கர் அளவிற்கு மண் மேடா கவும், சீமைக் கருவேல மரங்கள் அதிக ளவில் வளர்ந்து புதர்மண்டியுள்ளது.  எனவே, அப்பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதுடன், மேடான பகுதியை தூர்வாரி, பத்து அடிக்கு  ஆழப்படுத்த வேண்டும். இதன் மூலம் கூடுதலாக நீரை சேமிக்கலாம். இதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனில்,  விவசாயிகளுக்கு அணையில் இருந்து மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் அணை ஆழமாகும். அதே போல இந்த பகுதியில் உள்ள  மக்கள் பயன் பெறும் வகையில் படகு இல்லம் அமைத் தால் சுற்று வட்டார மக்கள் பயன்பெறு வார்கள் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.