tamilnadu

img

பேருந்து நிறுத்தத்தில் நிழல் கூடம் அமைக்க கோரிக்கை

நாமக்கல், ஜூன் 11- எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில்நிழல் கூடம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ள னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே அகரம்,  கொன்னையார்,  இலுப்புலி, கிளாப்பாளை யம் ஆகிய கிராமங்களி லிருந்து தினசரி செல்லும் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் தொழிற்சாலை களில் பணிபுரிபவர்கள் எலிமேடு,  குமாரமங்கலம், திருச்செங்கோடு மற்றும் ஈரோடு செல்லக்கூடிய பொதுமக்கள் எலச்சிபாளை யம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பய ணம் செய்வது வழக்கம். இந்நிலையில் இப்பகு தியில் கடந்த சில வருடங்க ளாகவே நிழல் கூட வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளா கியுள்ளனர். மேலும், மழை காலங்களிலும், வெயில் காலங்களிலும் அருகில் உள்ள கடைகளில் ஓரமாக நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் பெரும் சிர மத்தை பகுதி மக்கள் சந் தித்து வருகின்றனர். எனவே, உடனடியாக இப் பகுதியில் பயணிகள் நிழல் கூடம் அமைத்து தர வேண் டும் என்று அப்பகுதி மக் கள் கோரிக்கை வைத்துள் ளனர்.