tamilnadu

img

அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

தருமபுரி, நவ.8- கூலிக்காரன் கொட் டாய் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்திற் குட்பட்டது கூலிக்காரன் கொட்டாய். இப்பகுதி யிலுள்ள அரசு நடுநிலைப்  பள்ளி கடந்த 2018ஆம்  ஆண்டு உயர்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு கும்பள அள்ளி, நடப்பனஅள்ளி, கவுண்டன் கொட்டாய், ராஜாகொல்லஅள்ளி  ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான  மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  தற்போது இப்பள்ளியில் 62  மாணவிகள், 53 மாணவர்கள் என  மொத்தம் 115 பேர் பயின்று வரு கின்றனர். இப்பள்ளி மாணவர்கள் கடந்த  2012 ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி  பெற்று வருகின்றனர். அதேநேரம், பள்ளியின் தரம் உயர்த்தப் பட்ட நிலையில், பள்ளிக்கான சுற்று சுவர் கட்டப்படவில்லை. சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் விரும்ப தகாத செயலில் ஈடு பட்டு வருகின்றனர். ஆகவே, இப்பள்ளிக்கு உடனடியான  சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். மேலும், அரசு  பள்ளிக்கு சொந்தமாக உள்ள இடத்தை சமன் செய்து விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். விளையாட்டு உபகர ணங்கள் வழங்க வேண்டும். பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மாற்றியமைக்க வேண்டும். காலியாக உள்ள இளநிலை பணியாளர் இடத்தை நிரப்ப வேண்டும்  என பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.