tamilnadu

img

மின்கம்பத்தை மாற்றியமைக்க கோரிக்கை

அன்னூர்,டிச.14- அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட உப்பு தோட்டம் பகுதி நான்காவது வீதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சாலை யோர வளைவில் மின்கம்பம் அமைக் கப்பட்டுள்ளது. இதனால்  அவ்வழியாக கன ரக வாகனங்கள், செல்லும்போது மின்கம் பத்தில் உரசி கம்பம் முறிந்து விழும் சம்பவங் கள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளது.  இதனால் அருகிலுள்ள குடியிருப் புகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை முறை யிட்டும், போராட்டம் நடத்தியும் மின்வா ரியத்தினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, பெரும் அசம்பா விதம் ஏற்படும் முன் உடனடியாக மின்  கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.