tamilnadu

img

பராமரிப்பின்றி பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை மீண்டும் திறக்க கோரிக்கை

உதகை,ஜன.29- நீலகிரி மாவட்டம், குன்னூரில் பராமரிப்பின்றி பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை மீண்டும் திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் அண்ணா சிலை அருகே  பொது கழிப்பறை ஒன்று உள்ளது. இது போதிய  பராமரிப்பின்றி பல மாதங்களாக பூட்டி வைக்கப்பட் டுள்ளது. இந்த பகுதியில் குன்னூர் ரயில் நிலையம், அலு வலகங்கள் மற்றும் வங்கிகளும் காணப்படுவதால் மக்கள் அதிகம் கூடும் பகுதியாக உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகி்ன்றனர்.  இதனால் பலர் சாலைகளின் ஓரத்திலேயே சிறுநீர்  கழிப்பதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவ தோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இந்நிலையில்  நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி  பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பகு திகளில் கழிப்பறைகளை அமைத்து பராமரிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;