tamilnadu

img

சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை

இளம்பிள்ளை, பிப். 7- சேலம் அருகே மகுடஞ்சாவடியில் சாலை புதுபிக் கும் பணியானது, சாலை நடுவே உள்ள மின்கம் பத்தால் தாமதம் ஆகி வருகிறது. எனவே, மின்கம் பத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், அ. புதூர் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பட்டணம் பட்டியில் சாலை புதுப்பிக்கும் பணியானது நடை பெற்று வருகின்றது. இந்நிலையில், அந்த சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்கின்ற னர். இந்த மின்கம்பத்தை அகற்றி சாலையின் ஓர மாக நடப்பட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.