செங்கல்பட்டு,டிச.14- அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட முதல் அமைப்பு மாநாடு செங்கல்பட்டு கொலம்பஸ் பள்ளி யில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சாரங்கன் தலைமை தாங்கினார். வேதகிரி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி மாநாட்டைத் துவக்கிவைத்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.லெனின், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் பொ.சார்லஸ் சசிக் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதிய செங்கல்பட்டு மாவட்ட த்தை அறிமுகம் செய்து ஓய்வூதி யர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ய.சீதாராமன் பேசினார். மாநிலச் செயலாளர் கி.இளமாறன் நிறைவுரையாற்றினார். மத்திய அரசு ஓய்வூதியர்க ளுக்கு இணையாக தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும், 2003க்கு பிறகு பணியில் சேர்ந்த சி.பி.எஸ் திட்டத்தில் ஓய்வு பெற்ற தமிழக ஓய்வூதியர்களுக்கு பணிக் கொடை வழங்கிட வேண்டும், அனை வருக்கும் பங்களிப்பு ஓய்வூதிய சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவர் கே.வேத கிரி, செயலாளராக பி.பன்னீர் செல்வம், பொருளாளராக ஜெ. செல்வன், துணைத் தலை வர்களாக ரவிச்சந்திரன், சண்முக சுந்தரம், ராமமூரத்தி, இணை செயலாளர்களாகச் செல்வம், சிதம்பரம், மாநில செயற்குழு உறுப்பினர்களாக வேதகிரி, பொன்னுசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.