மே.பாளையம், ஜூன் 11- காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க வன எல்லை களில் வெட்டப்பட்டுள்ள யானை தடுப்பு அகழிகள் போதிய பராம ரிப்பின்றி மண் மூடியுள்ளதால் அக ழிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவை வனக்கோட்டத் திற்கு உட்பட்ட மேட்டுப்பாளை யம், சிறுமுகை மற்றும் காரமடை வனச்சரகப் பகுதிகளில் யானை கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். இவை காட்டைக் கடந்து அருகில் உள்ள ஊர்களுக் குள் நுழைவதைத் தடுக்க வன எல்லையோரங்களில் சுமார் நாற் பது கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்ட யானைத்தடுப்பு அகழி கள் வெட்டப்பட்டுள்ளன. ஆழ மான பள்ளத்தைத் தாண்டி யானை கள் வராது என்பதாலேயே வனத் துறை சார்பில் இந்த அகழிகள் வெட்டபட்டன. ஆனால் கடந்த சில ஆண்டு களாக வெட்டப்பட்ட அகழிகளை சரிவர பராமரிக்காத காரணத்தி னால் அகழிகளுக்குள் மண்சரிந் தும், செடி, கொடிகள் வளர்ந்தும் காணப்படுகின்றன. பல இடங்க ளில் அகழிகள் முற்றிலுமாக இடிந்து மண் மூடி விட்டதால் யானைகள் இவ்வழியே சுலப மாகக் கடந்து ஊருக்குள் நுழை கின்றன. இதனால் விவசாய பயிர்கள் அழிக்கப்பட்டு வருவ தோடு, உயிருக்கும் உத்திரவாதம் இல்லாத சூழல் நிலவுவதாகக் கூறும் கிராம மக்கள், உடனடி யாக யானைத்தடுப்பு அகழிகளை ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்கின்றனர். இது குறித்து வனத்துறை அதி காரிகளிடம் கேட்ட போது, “இருப்பு நிதியைப் பயன்படுத்தி யானைகள் மிக அதிகமாக நுழை யும் பகுதிகளைத் தேர்வு செய்து அகழிகளை சீரமைத்து வருகி றோம். அடுத்த கட்ட நிதி ஒதுக் கீட்டில் இப்பகுதியில் உள்ள யானைத்தடுப்பு அகழிகள் முழுமையாக சரி செய்யப்படும்” என்றனர்.