ஈரோடு, நவ.11- சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு நினை வுச்சின்னம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்து தர வலியு றுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கி.பி 1755 முதல் 1805 ஆம் ஆண்டு வரை கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட தீரன் சின்னமலையின் போர்படை தளபதியாக பொல்லான் இருந்துள்ளார். அவர் பிரிட்டிஷ் ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான அரச்சலூர் கிராமம், நல்லமங்காபாளையத்தில் ஊர் பொதுமக்கள் ரூ.2 லட்சம் செலவில் நினைவுச்சின்னம் கட்டினர். இந்நிலையில் கடந்த 11.12.2017 தேதியன்று வருவாய் துறையினரால் அனுமதி இல்லாமல் கட்டியதாக கூறி நினைவு சின்னம் இடிக்கப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் நினைவுச்சின்னம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்து தரக்கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட வருவாய் துறையினர் அதே இடத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் நிலத்தை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவுகள் அனுப்பினர். மாவீரர் பொல்லான் நினைவு நாளை அரசு விழாவாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி கடந்த 17.2.2019 ஆம் தேதியன்று மொடக்குறிச்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு 2020ல் நினைவு நாளை நல்லமங்காபாளையத்தில் அனுசரிக்க வேண் டும். அதற்கு நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்பகுதி மக்களின் சொந்த செலவில் நினைவுச்சின்னம் கட்டிக்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே, விரைந்து நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று அப்பகுதி மக்கள் மனு அளித்தானர்.