அவிநாசி அருகே நடுவசேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குடியரசு தின விளையாட்டு போட்டிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்றவர்க ளுக்கு வாலிபர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்கடாசலம், சிஐடியூ நிர்வாகி வேலுசாமி, பழனிசாமி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.