tamilnadu

img

காட்டு பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கிடுக

மாவட்ட வனச்சரகரிடம் விவசாயிகள் கோரிக்கை

உடுமலை,டிச.18- காட்டு பன்றியை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்கக்கோரி மாவட்ட வனச்சரகரிடம் விவசாயி கள் முறையிட்டு மனு அளித்தனர். காட்டு பன்றியை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்கக்கோரி செவ்வாயன்று  உடுமலை வனத் துறை அலுவலகத்தின் முன்பு விவ சாயிகள் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதைய டுத்து விவசாயிகள் சங்க நிர்வா கிகளுடன் மாவட்ட ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன் நடத்திய பேச்சுவார்த்தையில் விவசாயிக ளின் கோரிக்கைகளை அரசின் கவ னத்திற்க்கு கொண்டு செல்லுவ தாக உறுதியளித்தார். இதனடிப்ப டையில் போராட்டம் விலக்கி கொள்ளபட்டது. இந்நிலையில், தங்களுடைய கோரிக்கைகளை மாநில அரசுக்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்ட வனச்சரகரிடம் புத னன்று விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் காட்டு பகுதியில் இருந்து விவ சாய விளைநிலங்களையும் விவசா யிக்களை தாக்கும் காட்டு பன் றியை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். வன விலங்குகள் மூலம் விவசாயி களுக்கு ஏற்படும் இழப்புகளை கால தாமதம் இன்றி வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளை நிலங்களில் வன விலங்குகள் வந்தால் உடனடி யாக வனத்துறை விலங்குகள் விரட்ட வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்கு கள் விளை நிலங்களில் இறந்து கிடந்தால் விவசாயிகளை வனத்து றையினர் தாக்குவதையும், தவறு கள் செய்யாத விவசாயிகளை துன்புறுத்தும் நடவடிக்கைகளை வனத்துறை கைவிட வேண்டும். விவசாயிகள், வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கலத்தாய்வு கூட்டம் நடத்த வேண் டும். இதன் மூலம் அப்பகுதியில் நடக்கும் பிரச்சனைகளை அதிகா ரிகள் தெரித்து கொள்ள உதவி யாக அமையும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்டுக் கொண்ட மாவட்ட வனசரகர் திலீப் பதில ளிக்கையில், வன விலங்கு களை வேட்டையாடுவதை   மட்டும் தான் குற்றமாக கருதப்படும்.  மேலும்,விளைநிலங்களில் வனவிலங்குகள் வந்தால் உடனடி யாக எங்களுக்கு தகவல் தாருங் கள். வேகமான நடவடிக்கை எடுக் கிறோம். விவசாயிகளை வனத் துறை அதிகாரிகள் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி தவறு செய்யும் அதிகாரி கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும். வனவிலங் குகளால் விவசாயி மற்றும் விளை நிலங்கள் சேதம் ஏற்பட்டால் நிவா ரணம் உடனடியாக வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும், விவசாயிகளின் கோரிக்கை களை மாநில அரசின் கவனதிற்கு கொண்டு  செல்லப்படும் என்றார். முன்னதாக, இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு விவசாய சங்கத் தின் நிர்வாகிகள் உடுக்கம்பா ளையம் பரமசிவம், பாலதண்ட பாணி, ராஜகோபால் மற்றும் ஜெக தீஸ், சிங்காரம், ஈஸ்வரன், ரத்தின சபாபதி, கனகுவேல், திருமலை சாமி உள்ளிட்ட விவசாயிகள் கோட்டாட்சியர் ரவிக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.