கோவை, டிச. 6 – கோவை ஒலம்பஸ் பகுதியில் பலவீ னமாக இருந்து சுற்றுசுவரை வியா ழனன்று இரவோடு இரவாக மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்றினர். மேட்டுபாளையத்தில் சுவர் விழுந்து 17 பேர் பலியான சம்ப வத்தை தொடர்ந்து பலவீனமான சுற்று சுவர் உள்ள பகுதிகள் குறித்த தக வலை அறிந்து கோவை மாவட்ட நிர் வாகம் உடனடியாக அகற்றி வருகி றது. இதன் ஒரு பகுதியாக கோவை ராம நாதபுரம் ருக்மணி நகர் பகுதியில் உள்ள, சுற்று சுவர் இடிந்து விழும் நிலை யில் இருந்தது. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியாதை யடுத்து கோவை மாவட்ட நிர்வாகம் சம் பவ இடத்தை பார்வையிட்டனர். இச் சுவர் இருந்த பகுதியில் சுமார் 20 குடும் பங்கள் குழந்தைகளுடன் வசித்து வந்த னர். தொடர் மழையின் காரணமாக சுற் றுசுவர் மிகவும் பழுதடைந்து உள் ளது. இதனையடுத்து வியாழனன்று இரவு கோவை டவுன் பிளானிங் ஆபீ ஸர் செந்தில் பாலாஜி முன்னிலை யில் வருவாய்துறை அதிகாரிகள் மற் றும் கிராம நிர்வாக அதிகாரிகள், இட பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னி லையில் பலவீனமாக இருந்த சுவர் இடிக்கப்பட்டது.