அவிநாசி மே.8 - அவிநாசி அருகே மங்கரசு வலையபாளையம் ஊராட் சியில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் சார்பில் 1665 குடும் பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், சேவூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள 14 ஊராட்சிகளில் உள்ள ஏழை குடும்பத்தினர் ஊர டங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் இன்றி சிர மப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு உத விட தமிழக சபாநாயகர் ப.தனபால் சார்பில், அதிமுக மாநில தகவல் தொழில் நுட்பப்பிரிவு கொங்குமண்டல பொறுப் பாளர் டி.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் வியா ழனன்று மங்கரசு வலையபாளையம், பொங்கலூர், கானூர் ஆகிய ஊராட்சி பகுதியில் உள்ள 1665 ஏழை குடும் பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கினர். இதில் அவினாசி ஒன்றிய தலைவர் அ.ஜெகதீசன், ஊராட்சி மன்றத் தலை வர்கள் சேவூர் ஜி.வேலுசாமி, மங்கரசு வலையபாளையம் தம்பு(எ) ஆர்.வரதராஜன், பொங்கலூர் விமலா செல்வ ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயா செல்வராஜ், உமா தாமோதரன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு எம்.கே.எம்.கணேசன், எஸ்.முத்துக்குமார், துரைபாண்டி, ஹரிகரன், கே.கார்த்தி, கானூர் ஊராட்சி செயலாளர் மனோகரன், ஏ. பி.குப்புசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.