tamilnadu

img

அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண உதவி

தருமபுரி, மே 20- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சத்திய வான் நகரில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் சத்திய வான் நகரில் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு அரசு ஊழி யர் சங்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரசு ஊழியர் சங்க  மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளா ளர் கே.புகழேந்தி,  சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட  செயலாளர் சி.காவேரி மற்றும் வழக்கறிஞர் பி.மாதேஸ், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இளம்பரிதி, குப்புசாமி, சின்னராஜ், அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

;