tamilnadu

அமைச்சர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்திடுக

கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

கோவை, பிப். 7 –  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளியன்று புகார் மனு அளித்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு புத்துணர்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வியாழனன்று துவக்கி வைத்தார். இதையடுத்து அமைச்சரை முகாமில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென் றார். அப்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கி ருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணி களைக் கழற்றிவிடச் செய்தார். இச்சம்பவம் தமிழகம் முழு வதும் பெரும் அதிர்ச்சியும், கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதன்தொடர்ச்சியாக வெள்ளியன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம் மற் றும் திராவிட தமிழர் கட்சி சார்பில் பழங்குடியின சிறுவனை காலணியை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனி வாசன் மீதும், அவரின் நடவடிக்கையை தடுக்காமல் வேடிக்கை பார்த்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொது செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் அ.கரீம், இந்தியமாணவர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா, திராவிடத்தமிழர் கட்சியின் பழ.பேரறி வாழன் மற்றும் வழக்கறிஞர் தீபக்சந்திரகாந்த் உள்ளிட் டோர் மாநகர காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்த னர்.